வெள்ளி, 31 மே, 2013

Posted by Chief Editor On 3:18 AM



















ஒவ்வொரு 
நிமிடமும் 
தாயின் அணைப்பிற்காய்
ஏங்கிக் கொண்டே இருக்கிறது
குழந்தைகள்

எதிர் பார்ப்போடு
அணைப்பிற்காய்
ஓடி வருகின்ற
குழந்தைகளை அலட்சியம் செய்யும்
அப்பாக்கள்
குழந்தைகளின்
ஏக்கம் தளும்பும் விழிகளை
பார்ப்பதே இல்லை

அம்மாவும்
அப்பாவும்
வேலையில் இருந்து வரும் வரை
அடைக்கப்பட்ட
கதவுகளின் பின்
அன்பை தேடிக் கொண்டே
இருக்கிறது குழந்தைகள்

பொம்மைகள் அரவணைக்குமா
தயார் படுத்தப்பட்ட
சுவையான உணவுகள்
பாசத்தை ஊட்டுமா

இப்படித்தான்
பெற்றோருக்கும்
பிள்ளைகளுக்குமான தூரம்
ஆரம்பமாகிறது

அவர்கள் பிடிக்கும் முன்பே
வண்ணத்திகள்
பறந்து விடுகின்றன

நீண்ட நாள் கிடைக்காத
தாயின் அன்பான முத்தத்தை போல

நீண்ட நாள்
காண கிடைக்காத
தந்தையின் முகத்தைப் போல..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக